சித்திரைப்புத்தாண்டு விசேட பூசை
அம்பிகை அடியார்களே!
எதிர்வரும் 13.04.2012 வெள்ளி 18:30 மணிக்கு அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு விசேட பூசை , விசேட அபிஷேக ஆராதனை நடைபெற்று அதனை தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூசை நடைபெறும் என்பதை அம்பாள் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். மலரும் சித்திரைப்புத்தாண்டில் எமது தாயகத்தில் எம் மக்களுக்கு ஒரு அமைதியான வாழ்வு கிடைக்க மீனாட்சி அம்பாள்அருளை வேண்டி நிற்போமாக.
- 12.04.2012 வெள்ளிக்கிழமை 18:00 மணி முதல் 20:00 மணி வரை ஆலயத்தில் மருந்து நீர் வழங்கப்படும்.
- 13.04.2012 வியாழக்கிழமை 09.00 மணி முதல் 14:00 மணி – 17:00 மணி முதல் 21:00 வரை ஆலயம் திறந்திருக்கும்
மாவீரர் நாள் சிறப்பு வழிபாடு 2011
நிகழும் கர வருடம் கார்த்திகைத் திங்கள் 6ம் நாள் (25.11.2011) வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் அலயத்தில் நம் தேசத்திற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் சிறப்பு வழிபாடு.
இத் தேசியத் திருநாளை முன்னிட்டு , எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து இறை சந்நிதியில் மாவீரர் பூசை வழிபாடும் , மாவீரர் மோட்ச தீப வழிபாடும் நடைபெற திருவருள் கூடியுள்ளது. அடியார்கள் அனைவரும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டு மாவீரர் கனவு நனவாகவும் , மாவீரர் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல துர்க்கை அம்மனை வேண்டி நிற்போம்.
அபிசேகம் மாலை 18.30 மணிக்கு
கூட்டுப்பிரார்த்தனை 18.45
விசேட பூசை இரவு 19.00
மாவீரர்களுக்கு விசேட பூசை 19.30
மாவீரர் மோட்ச தீப வழிபாடு 20.30
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் அருள்மிகு துர்கை அம்மன் ஆலயத்தினர்.
'மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள் அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது". - தேசியத்தலைவர்
|






